Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாகேந்திரனின் படத்தில் நடிக்கச் சென்று நாகராஜாவை பிடித்த நடிகை

நாகேந்திரனின் படத்தில் நடிக்கச் சென்று நாகராஜாவை பிடித்த நடிகை
, வியாழன், 25 ஜூன் 2015 (15:21 IST)
புன்னகை பூ கீதா  அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களை தயாரித்தவர். வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்து தைரியமாக படம் தயாரித்தவர். 
தனியாக படம் எடுத்தவருக்கு படம் எடுக்கிற பாம்பு எம்மாத்திரம்?
 
நாகேந்திரன் இயக்கியிருக்கும், காவல் படத்தில் - நீயெல்லாம் நல்லா வருவடா படத்தின் புதிய பெயர்தான் காவல் - விமல் ஜோடியாக கீதா நடித்துள்ளார். படம் வெளியாகும் நிலையில் கேரளாவில் அவருக்கு ஏற்பட்ட த்ரில் அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
 
கேரளாவின் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது நடுவில் ஒரு பாம்பும் படமெடுத்திருக்கிறது. உடனே சட்டென்று அதனை கையில் பிடித்திருக்கிறார் கீதா. பாம்பென்றால் படையும் நடுங்கும். படப்பிடிப்பு குழுவும் நடுங்க, கீதா மட்டும் தில்லாக பாம்பை கையில் பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் தந்திருக்கிறார்.
 
'தில்'லான மோகனாம்பாள்.

Share this Story:

Follow Webdunia tamil