Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் சென்னைக்கு திரும்பிய புலி - விறுவிறு படப்பிடிப்பு தொடக்கம்

மீண்டும் சென்னைக்கு திரும்பிய புலி - விறுவிறு படப்பிடிப்பு தொடக்கம்
, வெள்ளி, 23 ஜனவரி 2015 (14:59 IST)
புலி படத்தின் முதல் ஷெட்யூல்ட் சென்னை புறநகரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் நடந்தது. அரண்மனை போன்ற பிரமாண்ட அரங்கில் விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் பங்கு பெற்ற பாடல் காட்சியும், ஆக்ஷன் காட்சியும் படமாக்கப்பட்டன. 
 
ஆந்தராவின் தலக்கோணத்தில் இரண்டாவது ஷெட்யூல்டை முடித்தவர்கள் மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அதே ஆதித்யராம் ஸ்டுடியோ. ஆனால், வேறு புதிய அரங்கு.
 
நேற்று முதல் புதிய அரங்கில் படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கின. இன்றுமுதல் முழுவீச்சில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
 
தேவி ஸ்ரீபிரசாத் இசையில் ஏற்கனவே மூன்று பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil