Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரசாந்த், கார்த்திகா இணையும் புலன் விசாரணை 2 - செல்வமணி இயக்குகிறார்

பிரசாந்த், கார்த்திகா இணையும் புலன் விசாரணை 2 - செல்வமணி இயக்குகிறார்
, புதன், 21 ஜனவரி 2015 (15:06 IST)
ஆர்.கே.செல்வமணியையும், விஜயகாந்தையும் ஒருசேர உயர்த்திய படம், புலன் விசாரணை. ஆட்டோ சங்கர் கதையையும், உடல் உறுப்புகளை திருடுவதையும் புத்திசாலித்தனமாக இணைத்து செல்வமணி உருவாக்கிய இந்தப் டத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
 

 
இந்த இரண்டாம் பாகத்தில் பிரசாந்த், கார்த்திகா நடித்து வருகின்றனர். ஆர்.கே. வில்லன். முதல் பாகத்தில் சரத்குமார் வில்லனாக அறிமுகமாகியிருந்தார்.
 
பெட்ரோலியத்தை கண்டுபிடிப்பதில் நடக்கும் குற்றத்தை மையப்படுத்தி புலன் விசாரணை இரண்டாம் பாகத்தை செல்வமணி எடுத்து வருகிறார். மாலத்தீவு, கொச்சி, மும்பை, கொல்கத்தா, மிஜோராம், ஒரிசா, சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். 
 
ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைக்கும் இந்தப் படத்தை ராவுத்தர் தியேட்டர் பிரைவெட் லிமிடெட் சார்பில் மன்சூர் அம்பலம் தயாரிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil