Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக வில்லன் வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (12:34 IST)
கோலிவிட்டில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமன இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தில் படங்கள் வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். ஆனால் நடிப்பும் அவருக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை.

இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதில் எந்த படங்களும் பெரிதாக அவருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. இதனால் அவர் நடிப்பில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். இப்போது தமிழில் வுல்ஃப் என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்குப் பிறகு இந்தி நடிகரும் இசையமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா கதாநாயகனாக நடிக்கும் பட்டாஸ் ரவிக்குமார் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரபுதேவா தன் சினிமா கேரியரில் இதுவரை வில்லனாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் ‘கோட்’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்வது யார்? அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

'இந்தியன் 2’ படத்தை பார்த்துவிட்டு ‘டீன்ஸ்’ படத்தை பார்க்க வாருங்கள்: பார்த்திபன் வேண்டுகோள்..!

இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், "ககனச்சாரி" திரைப்படம்!!

ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. உறுதி செய்த ஸ்ருதிஹாசன்..!

ஜூலை 12ல் ‘டீன்ஸ்’ ரிலீஸ்.. திடீரென போலீசில் புகார் அளித்த இயக்குனர் பார்த்திபன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments