Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏலே, முட்டாப்பயலே: ராதாரவி என்னை பார்த்து சொன்னார்!

ஏலே, முட்டாப்பயலே: ராதாரவி என்னை பார்த்து சொன்னார்!

ஏலே, முட்டாப்பயலே: ராதாரவி என்னை பார்த்து சொன்னார்!
, புதன், 28 செப்டம்பர் 2016 (10:29 IST)
தான் ஹீரோவாக நடிக்கட்டுமா என நடிகர் ராதாரவியிடம் கேட்ட போது அவர், முட்டாப்பயலே, ஹீரோவா நடித்து சினிமாவை கெடுக்காதடா என கூறியதாக பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


 
 
ஆர்.ஜே. மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கிய ஆங்கிலப்படம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது நான் சினிமா துறைக்கு வர முக்கிய காரணம் என்று சொன்னால் அது ராதாரவி அண்ணன் தான் என்றார்.
 
நான் ஹீரோவாக நடிக்கலாமா என கேட்டதற்கு ஏலே, முட்டாப்பயலே அப்படி எல்லாம் பண்ணாதடா. நீ பாட்டுக்கு ஹீரோவாக நடித்து சினிமா துறையை கெடுத்துடாதடா, உனக்கு காமெடி தான் செட் ஆகும் என்றார் அவர்.
 
திரும்பவும் அவரது வீட்டிற்கு சென்று அண்ணே நான் வில்லனாக நடிக்கட்டுமா என கேட்டென்ன். ஆனால் அவர் வேண்டாம் என கூறினார். அவர் பொறாமையில் தான் கூறுகிறார் என நினைத்தேன் என பவர் ஸ்டார் சீனீவாசன் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரிச்சலுகையுடன் வெளியாகும் ரெமோ