Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் கதையில் நடிக்கும் அசோக் செல்வன்!

vinoth
செவ்வாய், 28 ஜனவரி 2025 (10:30 IST)
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. திரையரங்குகள் மூலமாக மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியது.

இதையடுத்து கவனிக்கப்படும் இயக்குனராக உருவான விக்னேஷ் ராஜா அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் ஆனது. ஆனால் இன்னும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் விக்னேஷ் ராஜா எழுதியுள்ள கதை ஒன்றில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து தயாரித்தும் வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் மூனாறில் நடக்க உள்ளது. போர்த் தொழில் போலவே இதுவும் குற்றப் பின்னணியிலான கதை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

தெலுங்கு இயக்குனரோடுக் கைகோர்க்கும் ரஜினிகாந்த்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷனில் கலக்கிய ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’!

அடுத்த கட்டுரையில்
Show comments