பிரபல தமிழ் நடிகை தலைமறைவு
பிரபல தமிழ் நடிகை தலைமறைவு
பிரபல தமிழ் நடிகை இஷாரா தலைமறைவாக உள்ளதாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.
தமிழில் வெளிவந்த சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை இஷாரா. இதனையடுத்து, பப்பாளி என்ற படத்தில் நடித்தார். தற்போது, எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
டிஎன் 75 கே.கே. கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில், ஜோசப் லாரன்ஸ் தயாரிப்பில் கேவின் ஜோசப் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளார் மற்றும் இயக்குனர் கூறுகையில், கடந்த 2016 பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அன்று நடிகை இஷாராவுக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி ரூ.75 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம். ஒப்பந்தத்திற்கு பின்பு படப்பிடிப்பு நடைபெற்றது.
நாங்கள் 20 நாட்கள் கால்ஷீட் கேட்டோம், ஆனால் நடிகை இஷாரா 2 நாட்கள்தான் கால்சீட் கொடுத்தார். பின்பு அவரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அவரை தொடர்பு கொள்ளும் போது எல்லாம் துபாயில் இருப்பதாகவும், கேரளாவில் இருப்பதாகவும் வாட்ஸ்ஆப் மூலமே பதில் அளிக்கிறார். பல நேரங்களில் அவரது செல் சுவிட்ஸ்ஆப்பாக உள்ளது என்று வெடித்தனர்.