என்ன தலைவரே இப்படி பண்ணிட்டீங்க!… பிரபல நடிகர் பூவிலங்கு மோகன் பகிர்ந்த சம்பவம்!

vinoth
வெள்ளி, 8 நவம்பர் 2024 (15:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் 2002ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி படுதோல்வி அடைந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சங்கவி, கருணாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி என பெரிய நடிகர் பட்டாளமே நடித்தது. சுரேஷ் கிருஷ்ணா இயக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார். ரஜினிகாந்தே தயாரித்திருந்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பாபா படம் ரி ரிலீஸானது. படத்தின் சர்ச்சைக்குரிய க்ளைமேக்ஸ் காட்சி இப்போது மாற்றப்பட்டு நிறைய சலிப்பானக் காட்சிகள் எல்லாம் நீக்கப்பட்டு இருந்தாலும் படம் ரி ரிலீஸிலும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் பாபா படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்த பூவிலங்கு மோகன் ரஜினி பற்றி பகிர்ந்துள்ள சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் “பாபா ஷூட்டிங்கில் நான் நடித்தபோது  என்னை பக்கத்தில் உட்கார வைத்து ‘சீரியல்ல எல்லாம் எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க’ என்று ரஜினி சார் கேட்பார். நான் ஒரு நாளைக்கு 3000 ரூபாய் என்றேன். ‘ரொம்ப கஷ்டம்ல’ என்று வருத்தப்பட்டு பேசினார். அப்புறம் பாபா படத்துக்கான சம்பளம் எனக்கு வந்தது. ஒரு நாளைக்கு 3000 ரூபாய் கொடுத்திருந்தார் ரஜினி சார். அவர் நல்ல பிஸ்னஸ் மேன்.” எனக் கூறியுள்ளார். சீரியலில் அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டு அதே அளவு சம்பளத்தையே பாபாவுக்கும் அவர் கொடுத்துள்ளார். வழக்கமாக சீரியலை சினிமாவில் அதிக சம்பளம் நடிகர்களுக்குக் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments