Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அச்சம்… பயங்கர பாதுகாப்போடு நடக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு!

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (15:52 IST)
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மணிரத்னம் கோவிட் 19 பாதுகாப்பு உடைகளோடு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். ஆனால் சில பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இதையடுத்து படப்பிடிப்புக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் ஐதராபாத்தில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்த உள்ளார் மணிரத்னம். ஜனவரி 6 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கோவிட் அச்சம் காரணமாக அனைவரும் கடுமையான விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனராம். இயக்குனர் மணிரத்னம் கோவிட் பாதுகாப்பு உடைகளோடு இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments