Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் ப்ரமோஷன்… தமிழ்நாட்டை மட்டும் தவிர்க்கிறாரா விக்ரம்?

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (08:43 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

தமிழ் இலக்கியத்தின் கிளாசிக் வரலாற்று நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது பொன்னியின் செல்வன் நாவல். வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து இப்போது படக்குழுவினர் இந்தியா முழுவதும் படத்துக்காக ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் விக்ரம் மட்டும் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் அடுத்த நாளான நேற்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விக்ரம் கலந்துகொண்டார். இதனால் தமிழ்நாட்டில் மட்டும் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்க்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments