Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வன் வந்திருக்காது… மணிரத்னம் பேச்சு!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (07:41 IST)
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இப்போது இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு கலந்துகொண்டு வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மணிரத்னம் “நான் ஏற்கனவே இதை சொல்லி இருக்கிறேன். இருந்தாலும், திரும்பவும் ராஜமௌலிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர் பாகுபலியை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்காவிட்டால், நானும் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக எடுத்திருக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments