Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஷிகாவை தாய்க்கிழவி என கிண்டலடித்த பொன்னம்பலம்

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (11:15 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொன்னம்பலம் யாஷிகாவைப் பார்த்து தாய்க்கிழவி என்று கிண்டலடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பை தொடங்கியுள்ள நிலையில் நேற்று முதல் லக்சுரி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் ஒவ்வொருவருக்கும் ஒரு கவர் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும், அந்த கவரில் உள்ள கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
 
இந்த டாஸ்க்கில் தனக்கான கவரை எடுத்தார் பொன்னம்பலம். அதில் பிக்பாஸ் வீட்டில் யார்  பேசிக்கொண்டே இருப்பது என்பது தான் கேள்வி. சற்று யோசித்த பொன்னம்பலம் எப்பொழுதும் இடைவிடாமல் பேசிக்கொண்டிருப்பது யாஷிகா தான் என்றார்.
 
மேலும் யாஷிகாவை பார்த்து தாய்க்கிழவி எந்நேரமும் லொடலொடன்னு பேசிட்டு இருக்கு என நாட்டாமை படத்தில் வரும் டைலாக்கை பேசினார். மேலும் அந்த டைலாக்கில் வரும் ...தா என்ற வார்த்தையை அப்படியே கூறிவிட்டார் பொன்னம்பலம். கடுப்பான யாஷிகா அம்மா பத்தி எல்லாம் பேசாதிங்க என்றார். இதனால் பிக்பாஸ் செட்டில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments