Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (13:49 IST)
திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக் கூறிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான்  பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு  நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில்,   நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு விவகாரத்தில் நடிகை திரிஷா புகார் குறித்து   மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார்  நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வழக்குப் பதிவு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த  நிலையில், திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக் கூறிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும்,    நேரடியாக அழைத்து விசாரிக்க  அவருக்கு 41 ஏ எனப்படும் நோட்டீஸை அனுப்பியுள்ளதாகவும் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments