உறியடி படம் திரையரங்கில் தொடர ரசிகர்களே உதவுங்கள்
உறியடி படம் திரையரங்கில் தொடர ரசிகர்களே உதவுங்கள்
விஜயகுமார் தயாரித்து இயக்கி நடித்த உறியடி திரைப்படம் நல்ல விமர்சனத்தையும் பரவலான வரவேற்பையும் பெற்றது.
ஆனால், எல்லாம் சமூக வலைத்தளங்களில். தியேட்டரில் படத்தைப் பார்க்கலாம் என்றால், சென்னையிலேயே படம் எங்கு ஓடுகிறது என்று தேட வேண்டியிருக்கிறது.
பாராட்டு பெற படம் காணாமல் போவதை எந்த இயக்குனரால் சகித்துக் கொள்ள முடியும்? கடைசி முயற்சியாக விஜயகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் வடிவில் சிலவற்றை எழுதியுள்ளார்.
"அன்பு ரசிகர்களே, நீங்கள் சென்னைவாசி என்றால், உங்களுக்கு உறியடி படம் பார்க்க வேண்டும் என்றால் நாளை திரையரங்கத்துக்கு செல்லுங்கள். வெள்ளிக்கிழமை ஒரு காட்சியை தாண்டி படம் நீட்டிக்கப்படுமா எனத் தெரியவில்லை.
மற்ற நகரங்களிலும் படத்தின் வெளியீட்டை விரிவுபடுத்த அதிகபட்ச முயற்சிகள் எடுத்து வருகிறோம். படத்தைப் பற்றி மக்கள் ட்விட்டர், பேஸ்புக் போன்ற இடங்களில் பேசி, விவாதித்து, படத்தை தங்கள் ஊரில் பார்க்க விரும்புகிறார்கள் என வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நிரூபித்தால் மட்டுமே படம் வெளியாகும்.
உங்கள் ஊர்களில் படம் வெளியாகுமா என நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் தான். ஆனால் முடியவில்லை. விரைவில் திரையரங்க பட்டியலை வெளியிடுகிறேன். பண்பலை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. உறியடி படத்தை கொண்டு சேர்க்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு விட்டேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல சினிமாவை காப்பாற்றுவோம்.