தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் (பெப்சி) 24-11-16 அன்று திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியது. இதனால் 24 அன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
பெப்சி தலைவர் சிவா மீது ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தலைவர் பி.சி.ஸ்ரீராம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனை கண்டிக்கும் விதத்தில் இன்று ஒரு நாள் பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று பெப்சி பொதுச்செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதன்படி படப்பிடிப்புகள் மட்டுமின்றி டப்பிங், பாடல் பதிவு, எடிட்டிங் உள்பட அனைத்து திரைப்பட பணிகளும் முடங்கின.