நடிகைகள்தான் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவார்கள். அபூர்வமாக நடிகர்களும் இப்படி குத்தாடுவது உண்டு. நடிகர் பசுபதி, காதல் சொல்ல வந்தேன் படத்தில் அப்படியொரு குத்தாட்டத்தை போட்டுள்ளார்.
காதல் சொல்ல வந்தேன் படத்தை மார்க்ஸ் என்பவர் இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு சென்னை கண்ணகி நகரில் நடந்து வருகிறது. தற்போது பசுபதி இடம்பெறும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. கல்யாண் நடனம் அமைத்துள்ளார்.
தண்ணி லாரி ஓட்டும் நாயகனுக்கும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நாயகிக்கும் ஏற்படும் காதலை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகிறது.
நடிக்க அழைத்தாலே முகத்தை திருப்பிக் கொள்ளும் பசுபதி ஒரு பாடலுக்கு ஆட எப்படி சம்மதித்தார்?