Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் ஒரு சைக்கோ… வீட்டு வேலைக்காரர் குறித்து பார்வதி அடுத்த புகார்!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (15:35 IST)
தமிழ் மலையாள திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை பார்வதி நாயர். இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நிலையில் அவரது வீட்டில் ரூபாய் 6 லட்சம் ரூபாய் மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கை கடிகாரங்கள் திருடப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் செல்போன் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  அவர் வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் திருடி சென்று விட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ள சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ், தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் “பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய மது விருந்தை நான் பார்த்துவிட்டேன். அதை நான் வெளியில் சொல்லிவிடுவேன் என்ற பயத்தில் என்னை அநாகரிகமாக நடத்தி, அடித்து துன்புறுத்தி என் மீது எச்சில் துப்பி அவமானப் படுத்தினார். மேலும் என் மீது அபாண்டமாக திருட்டுப் பட்டத்தையும் சுமத்துகிறார்” எனக் கூறியுள்ளார். 

இந்நிலையில் இப்போது பார்வதி  சுபாஷ் மீது அடுக்கடுக்கான புகார்களை வெளியிட்டுள்ளார். அதில் “சுபாஷ் என் அனுமதி இல்லாமலேயே எனது புகைப்படங்களை எடுத்துள்ளார். அவர் ஒரு சைக்கோ. அவருக்கு பின்னால் யாரோ இருந்து இயக்குகிறார்கள். என் வீட்டில் ஆண் நண்பர்கள் வந்தார்கள் என்று சொல்வதெல்லாம், வழக்கை திசைமாற்றத்தான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments