Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சங்க பிரச்சார தாக்குதல் கூவத்தை விட மோசமாக இருக்கிறது : பார்த்திபன்

நடிகர் சங்க பிரச்சார தாக்குதல் கூவத்தை விட மோசமாக இருக்கிறது : பார்த்திபன்
, ஞாயிறு, 18 அக்டோபர் 2015 (12:15 IST)
நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த பார்த்திபன், நாசர் அணியினரும், சரத்குமார் அணியினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசிவருவது கூவத்தை விட மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


 

 
வாக்களிக்க வந்த பார்த்திபன், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது: 
 
“நடிகர் சங்கத் தேர்தல் பிரசாரத்திற்கு என்னை அழைக்காதீர்கள் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். அதனால் நாம் என்ன செய்யலாம் என்ன யோசித்து பார்த்தபோது, கூவத்தை சுத்தப்படுத்தும் முயற்சியை வலியுறுத்தி பிரசாரத்தை தொடங்கலாம் என நினைத்திருந்தேன்.
 
இந்நிலையில் “நேற்று இரவு என் மொபைல் ஹேங் ஆகிவிட்டது. என்ன என்று பார்த்தபோது, நாசர் அணியினரும் சரத்குமார் அணியினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறும் வீடியோக்கள் ஏராளமாக என் மொபைல் போனில் நிரம்பி வழிந்தது. அதை முழுவதும் பார்த்துவிட்டு தூங்குவதற்கு மூன்று மணி ஆகி விட்டது.
 
இரண்டு அணியினரும் மாறி மாறி தூற்றிக்கொண்டது, கூவத்தை விட மோசமாக இருந்தது” என்று கூறினார்.
 
மேலும் அவர் கிண்டலாக கூறும் போது “ ஒருவேளை சரத்குமார் அணியின் பக்கம் நான் சென்றால், விஷால் வரலட்சுமி பூஜை அன்றுதான் சங்கத்திற்கு வருவார் என்று பேசலாம். விஷால் பக்கம் சென்றால், அங்கே சரத் மட்டும்தான் இருக்கிறார். இங்கே நிறைய சரக்குகள் இருக்கிறது என்றும், பாண்டவர் அணி என்று பெயர் வைத்தபோதே சரத் அணியினர் மாண்டவர் ஆகிவிட்டனர் என்று பேசலாம். எப்படி வேண்டுமானாலும் பேசும் திறமை எங்களுக்கு உண்டு” என்று கிண்டலாக தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil