Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு விருதே குடுக்கலைய்யா.. என்ன சொல்லி சமாளிக்கிறது? – பார்த்திபன் ட்வீட்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (16:11 IST)
இயக்குனர் பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் தேசிய விருது பெற்றதாக செய்திகள் வெளியான நிலையில் எந்த விருதும் தரப்படவில்லை என பார்த்திபன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பார்த்திபன் நடித்து இயக்கி கடந்த ஆண்டு வெளியான படம் “ஒத்த செருப்பு”. விமர்சன ரீதியாக வெற்றியடைந்த இந்த படம் வசூலில் தோல்வியை தழுவியது. தனது படத்திற்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என பார்த்திபன் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், பார்த்திபனின் ஒத்த செருப்பு தேசிய விருதிற்கு தேர்வாகியுள்ளதாக செய்திகள் வெளியானது. அதை தொடர்ந்து திமுக பிரமுகர் ஒருவர் பார்த்திபன் பாஜகவில் இணைவதாக கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பார்த்திபன் “ஏற்கனவே இந்தியன் பனோரமாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மத்திய அரசின் செய்தி அறிக்கை வெளியிட்டதை ’தேசிய விருதா’ய் ஊடகங்கள் கொண்டாடியதை புரிந்துக் கொள்ள முடிந்தது. உலகெங்கும் பாராட்டுக்கள். மணியோசை முன்னரே வந்துவிட்டது, யானை வரும் பின்னே! பின்னே வேறென்னச் சொல்லி சமாளிப்பது .?” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments