Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 12ல் ‘டீன்ஸ்’ ரிலீஸ்.. திடீரென போலீசில் புகார் அளித்த இயக்குனர் பார்த்திபன்..!

Mahendran
வெள்ளி, 5 ஜூலை 2024 (11:32 IST)
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கி நடித்த ‘டீன்ஸ்’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் கோவையை சேர்ந்த கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
‘டீன்ஸ்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ள பார்த்திபன், அந்த படத்தை ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ‘டீன்ஸ்’ படத்தின் கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளராக செயல்பட்டு வந்த கோவையை சேர்ந்த சிவபிரசாத் என்பவர் மீது பார்த்திபன் போலீஸ் புகார் அளித்துள்ளார்.
 
கடந்த பிப்ரவரி 10 அல்லது 20ஆம் தேதிக்குள் ’டீன்ஸ்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதாகக் கூறி ரூ.68.54 லட்சம் சிவபிரசாத் கேட்டதாகவும், அதற்கு ரூ.42 லட்சம் செலுத்திய நிலையிலும் - குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காததால் ஏப்ரல் 19 வரை கால நீட்டிப்பு கேட்டதாகவும் பார்த்திபன் தனது புகாரில் கூறியுள்ளார்.
 
இதனை அடுத்து கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து சிவபிரசாத் என்பவரை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments