Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைட் கேப்பில் ஒரு படத்தை ஆரம்பித்த பாண்டிராஜ்… ஹீரோ இவர்தானாம்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:54 IST)
இயக்குனர் பாண்டிராஜ் ராஜ்கிரணை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறாராம்.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி புதுக்கோட்டையில் நடைபெற்று வந்தது. ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படத்தை விறுவிறுப்பாக இயக்கி வந்தார் பாண்டிராஜ். அதற்கிடையில் சூர்யா ஏற்கனவே ஒத்துக்கொண்ட இயக்குனர் ஞானவேல் படத்தில் நடிக்க சென்றார்,

அந்த இடைவெளியில் சும்மா இருக்காமல் பாண்டிராஜ் நடிகர் ராஜ்கிரணை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை தொடங்கி 10 நாட்கள் படப்பிடிப்பும் நடத்தி முடித்தாராம். ஆனால் கொரோனா லாக்டவுனால் இப்போது அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. லாக்டவுன் முடிந்ததும் சூர்யா படத்தை முடித்த பின்னர் மீண்டும் அந்த படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments