Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாண்டியராஜனின் இளைய மகன் கைது

பாண்டியராஜனின் இளைய மகன் கைது

பாண்டியராஜனின் இளைய மகன் கைது
, திங்கள், 20 ஜூன் 2016 (14:48 IST)
நடிகர் பாண்டியராஜனின் இளைய மகன் பிரேமராஜன், அனுமதியின்றி குட்டி விமானத்தை பறக்கவிட்டதால் கைது செய்யப்பட்டார்.


 
 
குட்டி விமானங்களை ரிமோட்டில் பறக்கவிடும் பொழுதுபோக்கு சென்னையில் பரவலாகி வருகிறது. பொதுவாக ஆள்கள் இல்லாத இடங்களில்தான் இதுபோன்று குட்டி விமானத்தை பறக்கவிடுவது வழக்கம். அனுமதியும் இதற்கு பெற வேண்டும்.
 
பாண்டியராஜனின் இளைய மகன் பிரேமராஜன் அனுமதி பெறாமல் சென்னையின் பரபரப்பான குடியிருப்புப் பகுதியில் குட்டி விமானத்தை பறக்கவிட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விமானத்தை கைப்பற்றியதுடன், அவரையும் கைது செய்தனர்.
 
சிறிது நேரத்தில் பிரேமராஜன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷுடன் இணைந்து படம் செய்யும் சௌந்தர்யா அஸ்வின்