Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ! - தனுஷின் திடீர் முடிவால் ரசிகர்கள் ஹேப்பி!

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (14:35 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவரான நடிகர் தனுஷ் திரைத்துறையில் நுழைந்தது தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். 


 
நடிகர்,  பாடகர், பாடலாசிரியர் , தயாரிப்பாளர் , இயக்குனர் என அத்தனை அவதாரங்களையும் எடுத்து அதில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகிறார். அந்தவகையில் இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் கடந்த 2017ம் ஆண்டு திரைக்கு வெளிவந்து சூப்பர் அடித்த படம் பவர் பாண்டி. இப்படத்தில் ராஜ்கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை நிகழ்த்தியது. 
 
எனவே இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எடுப்பீர்கள் என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக தனுஷ் முடிவெடுத்துள்ளாராம். 
 
தனுஷ் தற்போது அசுரன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் வடசென்னை படத்தின் 2-ம் பாகத்தை வெற்றிமாறன் எடுக்க உள்ளார். பின்னர் புதுப்பேட்டை 2-ம் பாக படமும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் தனுஷ் இராண்டாம் பாக படங்களில் பிஸி ஆகிவிடுவார். 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments