டேக் ஆஃப் ஆகாத மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் - காரணத்தை சொன்ன ஜெயமோகன்
டேக் ஆஃப் ஆகாத மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் - காரணத்தை சொன்ன ஜெயமோகன்
சில வருடங்கள் முன் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயற்சித்தார் மணிரத்னம். ஆனால், அந்த முயற்சி பாதியில் நின்றது. அதற்கான காரணத்தை ஜெயமோகன் தனது பிலாக்கில் எழுதியுள்ளார்.
"மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வனை ஒரு சினிமாவாக எடுக்கும் திட்டம் ஆறாண்டுகளுக்கு முன்பு உருவானது. நான் அதற்குத் திரைக்கதை எழுதினேன். ஆனால் தமிழகத்தின் எந்தக்கோயிலிலும் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. கோயில்களின் சுற்றுச்சுவர்கள் அல்லாமல் தமிழகத்தில் தரைத்தளத்தில் அமைந்த பெரிய கோட்டைகள் இல்லை. வரைகலை இன்றைய வளர்ச்சி அடையாத அன்றைய சூழலில் செட் போட்டு எடுப்பதென்றால் ஐம்பதுகோடி வரை செலவாகுமென கணக்கிடப்பட்டது. ஆகவே திட்டம் கைவிடப்பட்டது.
அந்தத் திரைக்கதையை நான் கோதாவரியின் கரையில் பிரம்மாவரம் அருகே இருந்த எலமஞ்சலி லங்கா என்னும் ஊரில் ஒரு விருந்தினர் மாளிகையில் ஒருமாதகாலம் தங்கி எழுதினேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இப்போது தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கிறது. பொன்னியின் செல்வனை திரைப்படமாக்குவாரா மணிரத்னம்?