Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்டார வழக்குத் தமிழைப் பேசுவது கஷ்டம் - நிவின் பாலி

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (13:26 IST)
‘வட்டார வழக்குத் தமிழில் பேசுவது கஷ்டமாக இருந்தது’ என நிவின் பாலி தெரிவித்துள்ளார்.


 
கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் இன்று வெளியாகும் படம் ‘ரிச்சி’. இந்தப் படத்தில் ஹீரோக்களாக நிவின் பாலி மற்றும் நட்டி இருவரும் நடித்துள்ளனர். ஹீரோயின்களாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் லட்சுமிப்பிரியா சந்திரமெளலி நடித்துள்ளனர்.
 
“தமிழ் சினிமாவின் ரசிகன் நான். எனது இந்த முதல் நேரடி தமிழ்ப் படத்தில் நடித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'ரிச்சி' ஒரு புது அனுபவமாக இருக்கும். கதையின் பின்னணியும், அணுகுமுறையும் அப்படி. 
 
இப்படத்தில் எனது கதாபாத்திரம் மிக சுவாரஸ்யமான மற்றும் சவாலான ஒன்று. இப்படத்திற்கு சொந்த குரலில் டப் செய்துள்ளேன். இதற்காக மிகவும் மெனக்கெட்டேன். ஏனென்றால், ஒரு  தமிழ் வட்டார பாஷயை பேசுவது சுலபமல்ல. 
 
இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இக்கதையை சிறப்பாக கையாண்டுள்ளார். எல்லா சக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக பெருமளவு உழைத்துள்ளனர். இந்த எனது முதல் நேரடி தமிழ் படத்தின் ரிலீஸை ஆர்வத்துடன்  எதிர்நோக்கியுள்ளேன். நல்ல, சுவாரஸ்யமான சினிமாவை என்றுமே கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் 'ரிச்சி' படத்தை நிச்சயம் ரசித்து பாராட்டுவார்கள் என நம்புகிறேன்” என்கிறார் நிவின் பாலி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments