Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய விருது பெற்ற கையோடு தனுஷின் 'இட்லி கடை' படத்தில் இணைந்த நித்யா மேனன்!

vinoth
திங்கள், 14 அக்டோபர் 2024 (15:05 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து   தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நடந்து வந்த நிலையில் இப்போது படக்குழு சென்னை திரும்பியது.

தற்போது மீண்டும் பொள்ளாச்சியில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில் நடிகை நித்யா மேனன் படக்குழுவோடு இணைந்துள்ளார். ஏற்கனவே இவர் தனுஷுடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் - இணைந்து வழங்கும், திரைப்படம் - "விஸ்வம்பரா"

நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும் புதிய படத்தின் தொடக்க விழா!

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது!

இயக்குநர் ஷங்கரின்"கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது!!

மஞ்சள் வீரன் படத்தில் TTF வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ்! - வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments