Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் உருவாகிறது புதிய படப்பிடிப்பு ஸ்டுடியோ… அரசு நிலம் வழங்கல்

vinoth
சனி, 6 ஜனவரி 2024 (07:01 IST)
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக சென்னை இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில்தான் நடந்தன.  மற்ற மொழி நடிகர்கள் சென்னையிலேயே பெரும்பாலும் தங்கி இருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வழக்கம் மாறி அவரவர் மாநிலங்களில் படப்பிடிப்பை நடத்த ஆரம்பித்தனர்.

அந்த வழக்கமும் இப்போது மாறி வருகிறது. அனைத்து மொழியினரும் இப்பொது படப்பிடிப்புக்காக ஐதராபாத்துக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ் சினிமாவில் அஜித், ரஜினி ஆகியோரின் படங்கள் தொடர்ந்து ஐதராபாத்தின் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில்தான் நடக்கின்றன. கிட்டத்தட்ட இன்று தென்னிந்திய சினிமாவின் தலைநகராக ஐதராபாத்தான் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் பூந்தமல்லி அருகே 150 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டுடியோ ஒன்றை நிர்மாணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான நில ஒதுக்கீடு விரைவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

உறுதியானது கார்த்தி- டாணாக்காரன் இயக்குனர் தமிழ் கூட்டணி- ஷூட்டிங் எப்போது?

முதல் முறையாக யுவன் இசையில் பாடும் சந்தோஷ் நாராயணன்… ஏழு கடல் ஏழு மலை அப்டேட்!

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments