Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையைக் கலக்கும் நேர்கொண்ட பார்வை – முதல்நாள் வசூல் இவ்வளவா ?

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (12:14 IST)
அஜித் நடிப்பில் நேற்று வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் முதல்நாள் சென்னை வசூல் இப்போது வெளியாகியுள்ளது.

அஜித் நடித்த 'நேர்கொண்டபார்வை' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பல இடங்களில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.  குறிப்பாக சென்னையில் காலை 4 மணி சிறப்புக் காட்சியாக ரோகிணி, பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட பல தியேட்டர்கள் திரையிடப்பட்டு ஆரவாரமாக வரவேற்பைப் பெற்றது. பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுவரும் நேர்கொண்ட பார்வை வசூலிலும் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் முதல் நாள் வசூல் 1.58 கோடி ரூபாய் எனவும் ஆன்லைன் டிராக்கர்ஸ் வெளியிட்டுள்ளனர். இது இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத வசூல் ஆகும். ஆனால் காலைக் காட்சிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமானத் தொகைக்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விடுமுறை நாளில்லாத சாதாரண வேலை நாளில் இவ்வளவு வசூல் வந்துள்ளது வாரக் கடைசியான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments