Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர்மறை விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்: சமுத்திரக்கனி

எதிர்மறை விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்: சமுத்திரக்கனி
, புதன், 24 மே 2017 (11:17 IST)
பாகுபலி-2 படம் வெளியானபோது அதை பார்த்துவிட்டு அந்த படத்தை 100 முறை பார்க்கலாம் என கூறியவர் சமுத்திரக்கனி. இயக்குனர் சமுத்திரக்கனி பாகுபலி படம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எவனாவது அப்படி இப்படின்னு கருத்து சொன்னா, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன் என்று கூறியிருந்தார். பாகுபலி உலக சினிமா' என்று தனது டுவிட்டரில் ஆவேசமாக  கூறியுள்ளார்.

 
சமுத்திரக்கனி தற்போது திரைப்படங்களை தரக்குறைவாக விமர்சிக்கும் விமர்சகர்களுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். "எனக்கு வெற்றி பெற்றவர்களையும், இரண்டாம் இடம் பெறுபவர்களையும் பிடிக்கும். ஆனால் மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டு  கருத்து மட்டும் கூறுபவர்களைப் பிடிக்காது. சவால் விடுகிறேன் விம்சர்கர்களால் 'பாகுபலி 2'-ல் ஒரு காட்சியைக் கூட எடுக்க  முடியாது" என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் கூறிகையில் ஆக்கபூர்வமானதாக இருக்கும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம்,  ஆனால் தனிப்பட்ட முறையில்  எதிர்மறை கருத்துகளை தெரிவிக்கும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இமேஜை டேமேஜ் செய்து கொண்ட ஒரு நாள் கூத்து பட நாயகி!!