Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

vinoth
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (15:49 IST)
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராக அறியப்படும் நீல் நிதின் முகேஷ் திரைத்துறையில்  பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடிக்க இவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதையடுத்து ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கத்தி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில் இவர் தான் அமெரிக்காவில் விமானநிலையத்தில் அதிகாரிகளால் சிறைப்படுத்தப் பட்டதாகக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

அவரது பாஸ்போர்ட்டை சோதனையிட்ட அதிகாரிகள் நிதின் பார்ப்பதற்கு இந்தியர் போல இல்லை என்று சொல்லி, அவர் போலீஸ் பாஸ்போர்ட்டில் அமெரிக்காவில் நுழைந்ததாக குற்றம்சாட்டி அவரை நான்கு மணிநேரம் சிறைப்படுத்தி விசாரித்துள்ளனர். பின்னர் தான் ஒரு நடிகர் என்றும் தன்னைப் பற்றி கூகுளில் தேடினால் தெரிந்துகொள்ளலாம் என அவர் சொன்ன பிறகே அவரைப் பற்றி தெரிந்து விடுவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

ரிலீஸுக்கு முன்பே லாபம் சம்பாதித்த ப்ரதீப்பின் ‘டிராகன்’ படம்!

என்ன லிஸ்ட் கூடிட்டே போகுது… பராசக்தி படத்தில் இணையும் பிரபல நடிகர்!

இணையத்தில் பரவி வரும் ஐஸ்வர்யா ராய் மகளின் மார்ஃபிங் வீடியோ! - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எனது 60 ஆவது படத்தை நானே இயக்குவேன்… சிம்பு அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments