மலையாள படங்களில் கமிட்டாகும் நயன்தாரா: காரணம் இதுவா?

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (15:10 IST)
தமிழில் ஆறு படங்களையும் தெலுங்கில் சில படங்களையும் கைவசம் வைத்துள்ள நடிகை நயன்தாரா அடுத்தடுத்து மலையாளத்தில் படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 
 
மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து கோட்டயம் குர்பானா என்ற மலையாள படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 
 
இதற்கு என்ன காரணமாக இருக்கும் என நினைத்த போது அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தக்வல் கிடைத்துள்ளது. அது என்னவெனில், நயன்தாரா விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார். 
 
எனவே திருமணத்துக்கு பிறகும் கதாநாயகியாகவே நீடிக்க மலையாள படங்கள் பக்கம் கவனம் செலுத்துகிறார் என்கிறார்கள். தென்னிந்திய மொழிகளில் மலையாள பட உலகம்தான் மூத்த நடிகைகளுக்கு சொர்க்கம். 
 
ஆம், திருமணத்துக்கு பின் 40 வயதுகளில் நடிகைகள் கதாநாயகியாக நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு அளவுக்கு மலையாளத்தில் சம்பளம் கிடைக்காது என்றாலும், கதாநாயகிகள் தனித்து திறமையை வெளிப்படுத்த முடியும். எனவேதான் இந்த முடிவை எடுத்துள்ளாராம் நயன்தாரா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்