Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் சுந்தர் சி மோதலா?.. நின்ற படப்பிடிப்பு!

vinoth
செவ்வாய், 25 மார்ச் 2025 (10:05 IST)
சில ஆண்டுகள் முன்னர் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

இதையடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகம்  உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க, இயக்குனராக சுந்தர் சி ஒப்பந்தமாகியுள்ளார். சுந்தர் சி இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளதால் படத்தின் கமர்ஷியல் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங், பிரம்மாண்டமான பூஜையோடு தொடங்கியது.

இந்நிலையில் ஷூட்டிங்கில் சுந்தர் சி யின் உதவி இயக்குனர் ஒருவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நயன்தாரா அவரைத் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த சுந்தர் சி ஷூட்டிங்கையே நிறுத்திவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் தயாரிப்புத் தரப்பு தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து ஷூட்டிங்கை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் பாட்டு கம்போஸ் பண்ணும்போதே தோனிக்கும்… அனிருத் பகிர்ந்த சுவையான தகவல்!

ரஜினி சார் உதவின்னு கேட்கும்போது எப்படி பண்ணாம இருக்க முடியும்- மோகன்லால் நெகிழ்ச்சி!

விஜய்யின் ஜனநாயகன் படத்தோடு போட்டி போடும் பராசக்தி! - தயாரிப்பாளர் அறிவிப்பு!

நடிகர், கராத்தே மாஸ்டர் ஹூசைனி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

கலக்குறீங்க ப்ரோ.. ‘டிராகன்’ படக்குழுவினரை சந்தித்த விஜய் வாழ்த்து..!4o

அடுத்த கட்டுரையில்
Show comments