Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகிழ்திருமேனியை அடுத்து நடிகராகும் இளம் இயக்குனர்!

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (19:42 IST)
நடிகர்கள் இயக்குனராவதும் இயக்குனர்கள் நடிகராவதும் தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வுதான். ஆனால் சமீபகாலமாக எதிர்பாராத சில இயக்குனர்கள் திடீரென நடிகராகி ஆச்சரியம் அளித்தனர். அவர்களில் ஒருவர் இயக்குனர் மகிழ்திருமேனி. இவர் விஜய்சேதுபதி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் 'நரகாசுரன்' இயக்குனர் நரேன் கார்த்திகேயனும் தற்போது நடிகராகியுள்ளார். சந்தீப் கிஷான் நடித்து வரும் 'கண்ணாடி' என்ற படத்தில் இயக்குனர் நரேன் கார்த்திகேயன், தெலுங்கு பட இயக்குனர் ஆனந்த் மற்றும் நடிகை மாளவிகா நாயர் ஆகிய மூவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர். இவர்கள் மூவரும் என்ன கேரக்டரில் நடிக்கவுள்ளனர் என்பது குறித்த தகவல் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது
 
'கண்ணாடி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments