Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க கட்டிட பணிகள்: சிவகார்த்திகேயன் கொடுத்த மிகப்பெரிய நிதியுதவி!

Mahendran
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (17:52 IST)
நடிகர் சங்க கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க கட்டிட பணிக்காக ஒரு பெரிய தொகையை நிதி உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சங்க கட்டிட பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில் நீதிமன்ற வழக்குகள், நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் பிரபல நடிகர்களிடம் ஒரு கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் வாங்கி, நடிகர் சங்க கட்டிட பணியை முடித்துவிட்டு அதன் பிறகு கிடைக்கும் வருமானத்திலிருந்து கடன் வாங்கியவர்களிடம் திருப்பிக் கொடுக்க திட்டமிடப்பட்டது.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் உட்பட ஒரு சிலர் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில் நேற்று இந்த கட்டிடத்தின் பணிகள் ஆரம்பமானது என்பது குறித்த செய்தி வெளியானது.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிகர் சங்க  கட்டிட  பணிக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு மாதத்திற்கு படத்தை வெளியிட முடியாது! வீர தீர சூரனுக்கு தடை! - அதிர்ச்சியில் தியேட்டர்கள், ரசிகர்கள்!

ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லாம் காணோம்? - Avengers Doomsday அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

அடுத்த கட்டுரையில்
Show comments