வெகுவிரைவில் வடிவேலு மீண்டும் திரையில் … நாய் சேகர் படத்தின் சூப்பர் அப்டேட்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (09:58 IST)
நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பை லைகா வெளியிட்டது.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. சென்னை, மைசூர் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பில் வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் நடித்து முடித்துள்ளனர். கடைசியாக படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துரிதமாக நடந்து விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக வடிவேலுவை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களின் ஏக்கம் வெகுவிரையில் தீரும் வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

உங்கள் படங்கள் அழுத்தமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன – மாரி செல்வராஜைப் பாராட்டிய தினேஷ் கார்த்திக்!

தயாரிப்பாளர்களின் செயலால் கடுப்பான தனுஷ்.. இதனால்தான் இளையராஜா பயோபிக் நிறுத்தப்பட்டதா?

ரவி மோகனின் ’ஜீனி’ படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

தனுஷின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் மாற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments