Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறைவன் எனக்கு தந்த ஆஸ்கார் இதுதான். விக்னேஷ் சிவன் பெருமிதம்

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (05:25 IST)
'போடா போடி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் சிவன், கடந்த ஆண்டு வெளீவந்த 'நானும் ரெளடிதான்' என்ற ஒரே படத்தின் வெற்றியால் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார். மேலும் இந்த படத்தால் அவர் நயன்தாராவின் காதலையும் பெற்றதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
இந்நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது சூர்யா நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் விக்னேஷ் சிவனின் நெடுநாள் ஆசை ஒன்று தற்போது நிறைவேறியுள்ளதாம். திரையுலகில் நுழையும் ஒவ்வொருவருக்கும் ரஜினியுடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறைந்தபட்சம் அவருடன் ஒரு புகைப்படமாவது எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். விக்னேஷ் சிவனுக்கும் அந்த ஆசை இருந்தது வியப்பில்லை. இந்த ஆசை நேற்று அவருக்கு நிறைவேறியுள்ளது. ஆம் நேற்று விக்னேஷ் சிவன் மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்ததோடு அவருடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்தபோது, 'இறைவன் எனக்கு தந்த ஆஸ்கர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments