என் மறைவுக்கு பின், என் பாடல்களின் ராயல்டி என் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டும்: நா.முத்துக்குமார்
என் மறைவுக்கு பின், என் பாடல்களின் ராயல்டி என் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டும்: நா.முத்துக்குமார்
தான் இறந்து விட்டால் தன் பாடல்களின் ராயல்டி தன் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டும் என்று பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் மதன் கார்க்கியிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி பாடல் ஆசிரியராக இருந்த நா. முத்துக்குமார் மஞ்சள் காமாலையால் கடந்த 14ம் தேதி மரணம் அடைந்தார். அவரின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.
முத்துக்குமாருக்கு நெருக்கமானவராக இருந்தவர்களில் ஒருவர் பாடல் ஆசிரியரான மதன் கார்க்கி. அவர் முத்துக்குமார் பற்றி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான பாடல்கள் எழுதியவர் அவர் தான். அதில் பெரும்பாலான பாடல்கள் ஹிட், அவர் தனது பாடல்களில் மிகவும் எளிதான வார்த்தைகளையே பயன்படுத்தி வந்தார். ஆனால் அந்த வார்த்தைகள் பல வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தின. கடந்த சில மாதங்களாக அவர் ஷங்கரின் 2.0 உள்பட பல படங்களுக்கு பாடல் எழுதி வந்தார் என்றார் மதன் கார்க்கி.
பாடல்களுக்கு ராயல்டி வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் முத்துக்குமாரும் ஒருவர். ஒரு நாள், அவர் நான் இறந்த பிறகு என் பாடல்களின் ராயல்டி என் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டும் என்று முத்துக்குமார் கூறியதாக மதன் கார்க்கி தெரிவித்தார்.
அவரின் ஆசை நிறைவேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் மதன் கார்க்கி.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்