Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிஸ்சார்ஜ் ஆன அன்றே ரிக்கார்டிங்கை தொடங்கிய இளையராஜா

டிஸ்சார்ஜ் ஆன அன்றே ரிக்கார்டிங்கை தொடங்கிய இளையராஜா
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2015 (11:36 IST)
இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளையராஜா, டிஸ்சார்ஜ் ஆன உடனேயே ரிக்கார்டிங்கை ஆரம்பித்து அனைவரையும் அதிசயிக்க வைத்தார்.
 

 
இளையராஜாவின் பேச்சு மூச்சு வாழ்க்கை எல்லாம் இசை என்பது பூமி உருண்டை என்பதற்கு சமமானது. சில தினங்கள் முன்பு இளையராஜா தனது பெயரிலான இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். 
 
நேற்று மதியம் 12 மணி அளவில் இளையராஜாவை டிஸ்சார்ஜ் செய்தனர். இரண்டு மூன்று தினங்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர் மருத்துவர்கள். ஆனால், காரில் திரும்பும்போதே தனது உதவியாளர்களுக்கு போன் செய்த இளையராஜா, இரண்டு மணி நேரத்தில் ரிக்கார்ட்டிங்குக்காக அனைவரையும் பிரசாந்துக்கு வரச்சொல்லியிருக்கிறார். அவர் சொன்னபடி இரண்டு மணி நேரத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் தனது ரிக்கார்டிங் பணியை இளையராஜா தொடங்கினார்.
 
சும்மாயில்லை இசை ஞானி என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil