Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் நான்தான் - முருகதாஸ் வீடியோ

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (15:23 IST)
சர்கார் கதை வருண் ராஜேந்திரனுடையது என முருகதாஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், இதுபற்றி முருகதாஸ் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

 
விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் கதை  வருண் ராஜேந்திரனுடையதுதான் எனவும், படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரன் பெயரை போடுவதற்கு முருகதாஸ் நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. எனவே, முருகதாஸ் கதையை திருடி எடுத்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பதிவுகளும், மீம்ஸ்களும் பரவி வருகிறது.
 
இந்நிலையில், இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள முருகதாஸ் “ வழக்கம் போல் வதந்தி பரவி வருகிறது. பாக்யராஜ் என்னை அழைத்து, கள்ள ஓட்டுப் போடுவதால் பொங்கி எழும் நாயகன் பற்றிய மையக்கருவும், உங்கள் கருவும் ஒன்றாக உள்ளது. மற்றபடி இரு கதைக்கும் தொடர்பில்லை எனவும், ஆனால், இதேபோல் ஒரு கதையை ஒரு உதவி இயக்குனர் பதிவு  செய்திருந்ததால், அவருக்கு ஊக்குவிக்கும் வகையிலும், பாராட்டும் வகையிலும் மரியாதை செய்யும் படிக் கேட்டுக்கொண்டார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். மற்றபடி கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.  முருகதாஸ்தான்” என முருகதாஸ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தலைவர் தரிசனத்துக்குப் பின்தான் எங்க பாட்டு… LIK படக்குழு கொடுத்த அப்டேட்!

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments