Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரும்பி வருகிறார் முண்டாசுபட்டி இயக்குனர் - மீண்டும் சி.வி.குமாருடன் கூட்டணி

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2015 (13:13 IST)
தமிழில் வித்தியாசமான முயற்சியாக அமைந்த படம், முண்டாசுபட்டி. ராம் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களின் பேராதரவுடன் நன்றாகப் போனது. திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமார் படத்தை தயாரித்திருந்தார்.


 
 
முண்டாசுபட்டியின் இரண்டாம் பாகம் தயாராகப் போவதாகவும், அதற்கான கதை எழுதுவதில் ராம் பிஸியாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன. சின்ன இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது படம் இயக்க, ராம் தயார். இது முண்டாசுபட்டியின் இரண்டாவது பாகமா?
 
நிச்சயமாக இல்லை. இது முண்டாசுபட்டி போலவே விததியாசமான கதையாம். ஆனால், முண்டாசுபட்டியின் இரண்டாவது பாகம் கிடையாதாம்.
 
முண்டாசுபட்டி படத்தை முதலில் ராம் குறும்படமாக இயக்கினார். அந்தக்கதை எழுத்தாளர் பிரபஞ்சனுடையது. குறும்படம் இயக்கும் போது பிரபஞ்சனிடம் ராம் அனுமதி கேட்க, பைசா வாங்காமல் அனுமதி தந்தார் பிரபஞ்சன். அதே கதையை சினிமாவாக எடுத்தபோது பிரபஞ்சனிடம் ராம் அனுமதியும் கேட்கவில்லை, பணமும் தரவில்லை.
 
கதை எழுதியவனுக்கு கல்தா, அதில் சம்பந்தமில்லாதவர்களுக்கு கோடிக்கணக்கில் லாபம்.
 
ராம்... இரண்டாது படத்திலாவது இதுபோன்று செய்யாதீர்கள்.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

Show comments