Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரும்பி வருகிறார் முண்டாசுபட்டி இயக்குனர் - மீண்டும் சி.வி.குமாருடன் கூட்டணி

திரும்பி வருகிறார் முண்டாசுபட்டி இயக்குனர் - மீண்டும் சி.வி.குமாருடன் கூட்டணி
, செவ்வாய், 27 அக்டோபர் 2015 (13:13 IST)
தமிழில் வித்தியாசமான முயற்சியாக அமைந்த படம், முண்டாசுபட்டி. ராம் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களின் பேராதரவுடன் நன்றாகப் போனது. திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமார் படத்தை தயாரித்திருந்தார்.


 
 
முண்டாசுபட்டியின் இரண்டாம் பாகம் தயாராகப் போவதாகவும், அதற்கான கதை எழுதுவதில் ராம் பிஸியாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன. சின்ன இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது படம் இயக்க, ராம் தயார். இது முண்டாசுபட்டியின் இரண்டாவது பாகமா?
 
நிச்சயமாக இல்லை. இது முண்டாசுபட்டி போலவே விததியாசமான கதையாம். ஆனால், முண்டாசுபட்டியின் இரண்டாவது பாகம் கிடையாதாம்.
 
முண்டாசுபட்டி படத்தை முதலில் ராம் குறும்படமாக இயக்கினார். அந்தக்கதை எழுத்தாளர் பிரபஞ்சனுடையது. குறும்படம் இயக்கும் போது பிரபஞ்சனிடம் ராம் அனுமதி கேட்க, பைசா வாங்காமல் அனுமதி தந்தார் பிரபஞ்சன். அதே கதையை சினிமாவாக எடுத்தபோது பிரபஞ்சனிடம் ராம் அனுமதியும் கேட்கவில்லை, பணமும் தரவில்லை.
 
கதை எழுதியவனுக்கு கல்தா, அதில் சம்பந்தமில்லாதவர்களுக்கு கோடிக்கணக்கில் லாபம்.
 
ராம்... இரண்டாது படத்திலாவது இதுபோன்று செய்யாதீர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil