Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி அறிவிப்பால் ‘அச்சம் என்பது மடமையடா’ வெற்றி - கவுதம் மேனன் கருத்து

மோடி அறிவிப்பால் ‘அச்சம் என்பது மடமையடா’  வெற்றி - கவுதம் மேனன் கருத்து
, ஞாயிறு, 20 நவம்பர் 2016 (13:29 IST)
பிரதமர் மோடியின் அறிவிப்பால் அச்சம் என்பது மடமையடா படம் வெற்றியடைந்ததாக அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் சிம்பு நடித்து, இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி சமீபத்தில் வெளியான படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதாகவும், படம் வெற்றி எனவும் சிம்பு சமீபத்தில் தெரிவித்தார்.
 
இந்நிலையில், படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த கவுதம் மேனன் ‘ பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி, படம் வெளியாவதற்கு 2 நாட்கள் முன்பு அறிவித்தார். அதனால், வேறெந்த படங்களும் வெளியாகவில்லை. அது எங்களுக்கு நல்லதாகிவிட்டது” என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக அளவில் 233 கோடிகளை கடந்த ஐஸ்வர்யா ராய் படம்