Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திலீப்-காவ்யா மாதவன் திருமணம் குறித்து சர்ச்சை ஏற்படுத்திய அமைச்சர்!!

திலீப்-காவ்யா மாதவன் திருமணம் குறித்து சர்ச்சை ஏற்படுத்திய அமைச்சர்!!
, திங்கள், 28 நவம்பர் 2016 (12:27 IST)
மலையாள திரையுல நட்சத்திரங்களான தீலீப் மற்றும் காவ்யா மாதவனின் திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இது குறித்து கேரள முன்னாள் அமைச்சர் கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 
மலையாள நடிகரான திலீப் குமாருக்கும் நடிகை காவ்யா மாதவனுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. அவர்கள் இருவருமே ஏற்கெனவே வேறு ஒருவருடன் திருமணம் செய்துகொண்டு விவகாரத்து பெற்றவர்கள். கடந்த சில காலமாக அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துனர். தற்போது அவர்களது நட்பு திருமணத்தில் முடிந்திருக்கிறது.
 
இந்நிலையில், அவர்களது திருமணம் பற்றி கேரள முன்னாள் அமைச்சர் பந்தளம் சுதாகரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “இனிமேல் பிரச்சனை இல்லை. கருப்புப்பணம் வெள்ளையாகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து இந்த கருத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் வலுத்ததால், தனது ட்விட்டர் பதிலிருந்து அதனை டெலிட் செய்துவிட்டார். முன்னால் அமைச்சரின் இச்செயலை அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரத்குமார் நீக்கம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் ராதிகா சராமரி கேள்வி!!