Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் - இயக்குனர் V.சேகர்

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (14:08 IST)
முன்னா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வி.சேகர் பேசியதாவது
 
"முன்னா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். கொரோனாவிற்கு பின் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி. ஒரு வெற்றிப்படத்திற்கு நல்ல  கதை இயக்குநர் தான் தேவை என்பது உண்மை. 
 
ஒரு படம் எடுக்கும் போதே பலபேருக்கு வேலை கிடைத்து விடுகிறது. அந்த வகையில் ஒரு தயாரிப்பாளர் படம் வெளியாகும் முன்பே பலரை வாழ வைக்கிறார். சின்னப்படங்கள் தான் நிறைய பேர்களை வாழ வைக்கிறது. பெரிய படங்கள் ஆலமரம் என்றால் சிறிய படங்கள் தான் நெல் போன்றது. 
 
எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார். அதுதானே உண்மை. ஒரு முதலாளியை மதிக்கிற துறை முக்கியம். பெரிய படம் அளவிற்கு நமது சின்னப்படங்களும் ஓட வேண்டும் என்றால் நாம் பெரிய படங்களை விட அதிகமாக உழைக்க வேண்டும். அந்த வகையில் இந்தப்படம் நன்றாக வந்திருக்கும் என்று நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பிரபல இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார்!

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments