என்னே ஒரு பாட்டு: 'நீதானே' மெலடிக்கு குவியும் பாராட்டுக்கள்

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (22:23 IST)
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டாம் பாடலான 'நீதானே' என்ற பாடல் ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் ஆகியோர்களின் காந்தக்குரலில் சற்று முன் வெளியாகியுள்ளது.



 
 
நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்
சொன்னதால் உடைந்தேன்
 
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ! நீதானே  
 
என்ற வரிகளில் தொடங்கும் இந்த பாடல் ஒவ்வொரு வரியிலும் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் ரசம் சொட்ட சொட்ட உள்ளது. 
 
விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் பிரபலங்களும் இந்த பாடலை கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நடிகை த்ரிஷா இந்த பாடலை கேட்டு சொக்கி போய்விட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 4 நிமிடம் 27 வினாடிகள் ஓடும் இந்த பாடல் நிச்சயம் அனைத்து தரப்பினர்களையும் கவரும் என்பதில் சிறு ஐயமும் இருக்காது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments