மெர்சல் மெலடி பல வருடங்கள் தாக்கு பிடிக்கும்: எடிட்டர் ரூபன்

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (06:25 IST)
தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் சமீபத்தில் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் சில முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளார்.



 
 
குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் ஒரு மெலடி பாடல் இந்த படத்தில் இருப்பதாகவும், நீண்ட வருடங்களுக்கு பின்னர் ஒரு திருப்தியான மெலடியை தான் பெர்சனலாக ரசித்து கேட்டதாகவும் கூறிய ரூபன், இந்த பாடல் பல வருடங்களுக்கு தமிழ்த்திரையுலகில் தாக்கு பிடிக்கும் என்று கூறினார்.
 
இந்த மெலடி பாடலை விஜய் பாடியிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த தகவலை சொல்ல அவர் மறுத்துவிட்டார். அதேபோல் விஜய் நடித்துள்ள மேஜிக்மேன் வேடம் குழந்தைகளுக்கு பிடித்தமான ரோல் என்றும், இந்த படம் அதனாலேயே குடும்ப ஆடியன்ஸ்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments