Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சல்' பேனர்கள் அகற்றம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (11:59 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வருமா? வராதா? என்று கடைசி நேர டென்ஷனில் படக்குழுவினர் இருந்தாலும், ரசிகர்கள் நம்பிக்கையுடன் பேனர்கள், போஸ்டர்கள் கட்-அவுட்டுக்கள் ஆகியவற்றை திரையரங்குகளில் வைத்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 'மெர்சல்' பேனர்களை நகராட்சி நிர்வாகம் அதிரடியாக அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
 
இதனையறிந்த விஜய் ரசிகர்கள் உடனே ஒன்றுகூடி நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி அரசு அலுவலக கட்டிடங்களில் பேனர்கள் வைத்தது தவறு என்று கூறி விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments