Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க… கேரளாவில் கைதானா மீரா மிதுன்!

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (15:26 IST)
பட்டியலின சினிமாக் கலைஞர்கள் குறித்து தவறாக பேசிய நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். தொடர்ந்து படங்கள் சிலவற்றில் நடித்து வரும் மீரா மிதுன் அண்மை காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த மீரா மிதுன் அதில் தாழ்த்தப்பட்ட சமூகம் ஒன்றை கேவலமாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் இதுபற்றி மீரா மிதுன் “தாராளமாக என்னை கைது செய்யுங்கள்... ஏன் காந்தி , நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா?. என்னையெல்லாம் கைது செய்ய முடியாது” என பேசி மீண்டும் கோபத்துக்கு ஆளானார். இந்நிலையில் இன்று மீரா மிதுன் கேரளப் போலிஸாரின் உதவியோடு கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிரைலரே இவ்வளவு கேவலமா இருக்குது: வனிதா விஜயகுமாரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா... மீண்டும் ஒரு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா?

கமலுக்கும் ஜோடி, சிம்புவுக்கும் ஜோடி.. ’தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டரில் மணிரத்னம் வைத்த ட்விஸ்ட்..!

’ஏஸ்’ இயக்குனரை காலி செய்த விஜய் சேதுபதி.. அடுத்த பலியாடு யார்?

Final Destination பார்த்தபோது இடிந்து விழுந்த தியேட்டர்! மயிரிழையில் தப்பிய மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments