Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

vinoth
வெள்ளி, 29 நவம்பர் 2024 (08:04 IST)
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ‘வாழை’ இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்கு மூலமாகவே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர் துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதன் பின்னர் அவர் தனுஷ் மற்றும் கார்த்தி ஆகியோருக்குக் கதை சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனுஷூக்காக அவர் சொன்ன கதை அதிக பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இதற்கிடையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. மாரி செல்வராஜ் அடுத்து கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதன் பின்னர் இந்த படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments