Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவ் விக்ரம்& மாரி செல்வராஜ் கூட்டணி இப்போது இல்லையா?

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (15:03 IST)
துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் இப்போதைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மாரி செல்வராஜ் இயக்கிய பரியெறும் பெருமாள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து அவர் இப்போது தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அவர் தன் முதல்பட தயாரிப்பாளர் பா ரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம்மை கதாநாயகனாக ஒரு படம் இயக்க உள்ளார் என்று அறிவிப்புகள் வெளியாகின. மேலும் அந்த கதை கபடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என சொல்லப்பட்டது.

ஆனால் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் தனுஷ் கூட்டணியில் மாரி செல்வராஜ் ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தை முடித்த பின்னரே அவர் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments